இன்னும் விரல் விட்டு எண்ண கூடிய நாட்களில் உலக கிண்ண போட்டிகள் தொடங்க இருக்க நடத்தும் நாடுகளில் முக்கியமான இந்தியாவின் மீதான அதித எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கிஉளது 1983 ஆண்டு மேற்குஇந்தியதீவுகளின் தொடர் வெற்றியை தடுத்து கிணத்தை வென்ற இந்தியா என்று ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முற்றுபுள்ளி வைத்து கிணத்தை தனதாக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் துளிர் விட ஆரம்பித்துள்ளது அதே போல தான் கள நிலைமையும் அமைந்துள்ளது இம்முறை ஆஸ்திரேலியாவை விட இந்தியா சற்று அதிக பலத்தடன் தான் காணபடுகிறது அதிலும் எதிர் அணிகளை தங்கள் குகைக்குள் சந்திப்பதால் இம்முறை இந்தியா எதிர் அணிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை இந்தியாவின் கடந்த 2 வருட பெறுபேறுகள் மிக சிறப்பாகவே அமைந்துள்ளன கேர்ஸ்டனின் வழிநடத்தலில் டோனி தலைமையில் அனுபவம் இளமை ஆக்ரோஷம் கலந்த சிறப்பான அணியாக வலம்வருகிறது இந்த வருட ஆரம்பத்தில் தெனப்ரிக்கா பயணத்தின் போது பெரிதாக சாதிக்காவிட்டாலும் அந்த அணியை கடுமையாக மிரட்டி இருந்தது
இம்முறை தெரிவு செய்யபட்ட 15பேரும் ஒரு விதத்தில் திறமையானவர்கள் தான் ஆரம்பத்தில் சேவாக் சச்சின் என தொடங்கும் run machine யூசப் பதான் வரை நீள்கிறது எந்த ஒரு நேரத்திலும் போட்டியின் தன்மையை மாற்ற கூடிய சேவாக் டெஸ்ட் ஒருநாள் T20 என அனைத்து விதமான போட்டிகளிலும் ஒரே மாதரியான ஆட்ட போகும் தொடர்சியான சிறந்த போர்மும் இந்தியாவின் ஓட்ட குவிப்பை நிச்சயமாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை அதே போல தான் சச்சினும் சேவாகை விட எதிர் அணிகளுக்கு நிச்சயமாக நெருக்கடி கொடுப்பர் அதை தொடர்ந்து காம்பிர் கொஹ்லி டோனி ரைனா பதான் என நீண்டு செல்லும் பலமான அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசை அதிலும் தென்ஆப்ரிக்காவின் வேகங்களை திக்கு முக்கட செய்த பதான் தொடர்ந்தும் அவதாரம் எடுப்பார் என நம்பலாம் அதே போலவே டோனியும் சளைத்தவர் இல்லை தனது ஆரம்பகால அத்ரடிகளை தற்போது வெகுவாக குறைத்து கொண்டாலும் பந்து பந்து ஓட்டம் எடுப்பதிலும் விக்கெட்களுக்கு இடையில் ஓடி ஓட்டம் எடுப்பதிலும் அவருக்கு இணை அவரே அதை தொடர்ந்து ஹர்பஜன்,சஹீர், முனாப்,பிரவீன்குமார் என்ன தொடரும் பந்து விச்சாளர்கள் குறிப்பாக ஹர்பஜன்சிங்க் இன் துடுபாட்டம் இந்தியாவுக்கு அதிகபலம்சேர்க்கும் கிடத்தட்ட இந்த 11 பேருமே முக்கியமான போட்டிகளில் களமிறங்க இருக்கிறார்கள் யூவராஜ் சிங்க் நிலைமை கேள்விகுறி தான்விராட் கோஹ்லிஅண்மைய பெறுபேறுகள் பாராட்டும்படிய அமைந்துள்ளன இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அவருடைய இடம் கிடத்தட்ட உறுதியாகிவிட்டது அத்துடன் களத்தடுப்பும் சிறப்பாகவே அமைந்துளதினால் தோனிக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவராக மாறிஇருக்கிறார் அனல் யூவராஜ் சிங்க் இன்னமும் பெரிதாக சாதித்து காட்டவில்லை அத்துடன் 3ம் அல்லது 4ம் இல்லக்க துடுப்பட்ட வீரராக யூவராஜ் சிங்க் பொருத்தமானவர் கிடையாது ஆனால் விராட் கோஹ்லி அவ்வாறு இல்லை யூசப் பதானின் வரவு 5வது பந்துவீசளர் நிலை நிரப்புவதால் நிச்சயமாக யூவராஜ் சிங்க் முதல் போட்டியில் ஆடுவது சந்தேகமே
அந்த நிலமையி தான் நேஹேர . ஹர்பஜன் சிங்க் ,சகிர்கான் இடங்கள் நிச்சயம் முனாப் படேல் இடமும் கிடத்தட்ட உறுதி அடுத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது அதிலும் பிரவீன் குமார்க்கு வாய்புகள் அதிகம் 4 பந்து விச்சாளர்கள் 5 துடுப்பாட்ட வீரர்கள் 1 விக்கெட் காப்பாளர் 1 சகல துறை வீரர் என்று ஒரு பலமான அணியாகவே களமிறங்க இருக்கிறது இதை விட வெளியில் அஸ்வின் மட்டும் சாவ்லா .T20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் பலமான ஒரு அணியாக வலம்வர அஸ்வினும் ஒரு காரணம் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக அனுபவம் இல்லாவிட்டாலும் இந்திய மைதானங்களில் ஒரு கரை கண்டவர் இவரும் தோனிக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவராக மாறிஇருக்கிறார்
சில வேளைகளில் இந்தியா 2 சுழல் பந்து விச்சாளர்கள் உடன் களமிறங்கலாம் அபோது அச்வின்கு வாய்பு கிடைக்கலாம் ஆனால் அது பெரும்பாலும் சாத்தியபடாத ஒன்று .chawlaஇன் தெரிவு பலராலும் விசனப்படுத்தபட்டது அது உண்மையில் ஏற்கபடவேண்டிய விடயம் தான் எவருமே எதிர்பார்க்காத வகையில் இத் தெரிவு அமைந்துள்ளது இவர்க்கு பதிலாக இடதுகை சுழல் பந்து விச்சாளர்கள் ஆன ஜடேஜா அலது ஓஜா தேர்வு செய்துஇருக்கலாம் இவர்கள் இருவரும் கொஞ்சம் அனுபவம் உடையவர்கள்
ச்வாலாவின் தெரிவு இனமும் புரியாத புதிராக காணபடுகிறது மொத்தத்தில் ஸ்ரீகாந் தலைமையிலானதெரிவாளர்கள் இயன்ற அளவில் ஒர மிகசிறந்த அணியை தேர்வு செய்துள்ளனர் இனி கதவடைப்பு செய்யப்பட்டவர்களின் வரிசையை எடுத்துக்கொண்டால் முதலாமவர் ரோஹித் ஷர்மா இவர் சேர்கபடாதது ஆமோதிக்க வேண்டிய விடயம் தான் இவர் தனக்கு கிடைத்த பெரும்பாலான வாய்ப்புகளை தவறவிடிருந்தார் அத்துடன் இவரும் சேர்க்கப்படல் டோனியுடன் சேர்த்து 8 தொழில் முறை துடுப்பாட்ட வீரர்கள் (professional batsman) என்ற எனிக்கைக்கு வழி கோலும் எது நிச்சயமாக அணியின் சமநிலையை பாதிக்கும் என்னை பொறுத்த மட்டில் 6 முழு நேர பந்து விச்சாளர்கள் தேவை என்ற காரணத்தில் தான் சாவ்ல சேர்க்கபட்டுளர்
ஸ்ரீகாந் தலைமையிலான தெரிவாளர்கள் மீது தொடர்ச்சியாகவே கண்டனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன .அதாவது உலக கிண்ண போட்டிகளை தவிர்த்து ஏனைய போட்டிகளின் போது தமிழக வீரர்கள் உள்வாங்க படுவதும் ரொபின் உத்தப்பா ,மனிஷ் பண்டே,பாதிவ் படேல், திவாரி போன்ற சிறந்த வீரர்கள் ஓரம்கட்டபடுவதும் தொடர்ச்சியாகவே நடைபெறுகிறதுஅதற்கு பதிலடி கொடும் விதமாகவே மேலதிக விக்கெட் காப்பாளர் தேர்வு செய்யபடவில்லை அவாறு ஒருவர் தேர்வு அனால் அது தினேஷ் கார்த்திக் ஆக நிச்சயம் இருக்கும் ஆகவே தன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் உண்மையவதை தடுக்கவே ஸ்ரீகாந் தலைமையிலான தெரிவாளர்கள் மேலதிக விக்கெட் காப்பாளர் தேர்வு குறித்து வாய் திறக்கவில்லை
இறுதியாக ஸ்ரீசாந்த் மைதனத்தில் அவரின் நடத்தைகள் பாராட்டும் படியாக அமையில்லை அத்துடன் தோனிக்கு அவர் மீதான வெறுப்பு என்பனவும் ஸ்ரீசாந்தின் புறக்கணிப்புக்கு காரணம் ஆகும் இவ்வாறு என்ன தான் பலமான அணியாக களமிறங்கினாலும் அங்கங்கு ஒரு சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன இந்த வரிசையில் முதலாவதாக இந்தியாவின் முக்கியமான run machine இரண்டும் இன்னமும் உபாதைகளில் இருந்து விடுபடவில்லை அதே போல தோனியின் இந்த வருட பெறுபேறுகள் திருப்தியாக அமையவில்லை இறுதி 5 போட்டிகளில் ஒன்றில் கூட 50 ஓட்டங்களை தாண்டவில்லை அத்தடன் இன்னமும் இறுதி 11 பேர் உறுதியாகவில்லை நாட்கள் நகர நகர போட்டிகளின் கடினதன்மை வெகுவாக அதிகரிக்கும் அப்போது அடிக்கடி வீரர்களை மாற்றுவது ஒரு ஆரோகியமான விடயம் அல்ல
அத்துடன் அணியின் களத்தடுப்பு பெரிதாக பேசும் அளவில் இல்லை அதே போல் தொடர்ச்சியாக 45 நாட்கள் நடைபெறுவதால் வீரர்களின் உபாதைகள் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தும் அப்போது மாற்று வீரர்கள் குறித்த கேள்விகள் எழும்? மொத்தத்தில் சேவாகின் அதிரடியும் ஹர்பஜன் சஹீரின் பந்து விச்சும் கைகொடுக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் தென்படலாம் மாறாக 2007 போல் மன்கவ்வினால் ரசிகர்களின் அதித அன்பு தொல்லைக்கு மீண்டும் ஆளாக வேண்டி வரலாம்
எது எவ்வாறாக இருந்த போதிலும் இந்தியாவின் ஒரே அசைக்கமுடியாத பலம் டோனியின் cool அது தான் விடை தர வேண்டும்